Friday, 5 May 2023

ஆண்மை குறைவு.

 

ஆண்மை குறைவு என்றால் என்ன?

             ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர்.           ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும்.

ஆண்மை குறைபாட்டை எளிதில் தெரிந்துகொள்வது எப்படி..

             பொதுவாகவே ஆண்கள் சந்திக்கும் பிரச்சனையில் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தான் பெரும் பிரச்சனையாக சில சமயத்தில் மாறி விடுகிறது.

              இன்னும் சொல்லப்போனால் ஆண்மை குறைவு பிரச்சனை இருந்தாலும் சரி, தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் சரி.. இது ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுக்கும்.சரி ஒரு ஆணுக்கு உண்மையிலேயே ஆண்மை குறைவு உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது.

              அதாவது தாம்பத்யத்தில் ஈடுபடும் போது, ​​உங்கள் முழு விருப்பம் உள்ளதா என நினைத்து பாருங்கள். ஏதோ கட்டாயத்திற்கு ஈடுபட்டால், தாம்பத்ய உறவு திருப்தியாக இருக்காது. இதற்கு அடுத்தபடியாக, எப்போது ஈடுபட்டாலும் இதே போன்ற பிரச்னை உங்களுக்கு இருக்கிறதா என சிந்தித்து பாருங்கள். இதை ஒப்பிட்டு பார்த்தாலே நமக்கு  ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.

               மேலும், மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை இது இரண்டும் தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.மேலும் அதிக மன அழுத்தம் இருந்தாலும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள், தண்டுவட பிரச்னை உள்ளவர்கள். இவர்களுக்கு பொதுவாகவே தாம்பத்ய வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரும்.

ஆண்மைக்குறைவின் காரணங்களும் நிவர்த்திகளும்

ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது. இதில் ராஜ உறுப்புகள் என்ற மூளை, இருதயம், கல்லீரல், விதைப்பை, நரபு மண்டலம் என்ற 5 உறுப்புகளும் முக்கியமானதாகும். இதில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மைக்குறைவு ஏற்படும்.  

ஆண்மையின் கோட்பாடுகள்

சிற்றின்ப ஆசை உள்ளத்தில் ஏற்பட்டு, அந்த எண்ணம் மூளைக்கு அனுப்பப்படுகிறது.

1. மூளை:

மூளையானது, சிற்றின்ப ஆசையை நிறைவேற்ற, மற்ற உறுப்புகளுக்கு கட்டளையிடுகின்றது.

2. இருதயம்:

மூளையின் கட்டளைக்கேற்ப, இருதயம் வேகமாக அதிகப்படியான ரத்தத்தை பம்ப் செய்து ஆணு உறுப்புக்கு அனுப்பப்படுகிறது.

3. கல்லீரன்:

அதே போல் கல்லீரலின் செயல்பாடுகளால் உற்பத்தியாகும் பித்த வாய்வும், ஆணுறுப்புக்கு அனுப்பப்படும்போது, ​​இருதயம் அனுப்பும் இரத்தமும், கல்லீரல் அனுப்பும் பித்த வாய்வும் ஒரு சேர ஆணுறுப்புக்குள் செல்லும்போது, ​​ஹைட்ராலிக் போல ஆணுறுப்பு விம்மி எழுகிறது.

4. விதைப்பை:

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவும், ஆணுறுப்புக்கு அனுப்பப்படும்போது, ​​இருதயம் அனுப்பப்படும் இரத்தமும், கல்லீரல் அனுப்பும் பித்த வாய்வும் ஒரு சேர ஆணுறுப்புக்குள் செல்லும்போது, ​​ஹைட்ராலுக் போல ஆணுறுப்பு விம்மி எழுகிறது.

5. நரம்பு மண்டலம்:

ஆண்மை சக்திக்கு மிக மிக இன்றியமையாது நரம்பு மண்டலமாகும். மூளையில் இருந்து அனுப்பப்படும் கட்டளைகள் மின் காந்த அலைகள் மூலம் மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படும் இருதயம், கல்லீரல், விதைப்பை அனுப்பும், ரத்தம், பித்த வாயு, விந்தணு, போன்றவற்றை ஆணுறுப்புக்கு எடுத்துச் சென்று, ஒரு விதமான கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தி, ஒரு மனிதனை தாம்பத்ய உறவுக்குத் தயார்படுத்தி, சக்தியாக செயல்படுவது நரம்பு மண்டலமாகும். இப்படி இந்த 5 ராஜ உறுப்புகளும் ஒரு சேர செயல்படும்போது தான் முழுமையான ஆண்மை சக்தி ஏற்படுகிறது. இதில் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மை குறைவு ஏற்படும்.

ஆண்மைக்குறைவின் அறிகுறிகள்

மூளை:

மூளையின் குறைபாடுகளால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் சிற்றின்ப ஆசையே இருக்காது. எப்போதும் சோம்பலாக இருப்பார்கள். ஆணுறுப்பு எழுச்சி இல்லாமல் தளர்ந்து சிறுத்து விடும்.

இருதயம்:

இருதயத்தினுடைய பாதிப்பால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், ஆணுறுப்பு மெலிந்து சிறுத்து இருக்கும், முழு விறைப்பு சக்தி இருக்காது. உறவில் ஈடுபடும்போது அதிக மூச்சு வாங்கும். துரிதமாக சக்தி வெளிப்பட்டு, மிகுந்த களைப்பும், பலகீனமும் ஏற்படும்.

ஈரல்:

ஈரலின் பாதிப்பால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் ஆணுறுப்பு எழுச்சியில்லாமல் சோர்ந்து இருக்கும். சில நேரம் சக்தி இருந்தாலும், உறவில் ஈடுபடும்போதே உணர்ச்சி குறைந்து உறுப்பு சிறுத்து விடும். தாம்பத்திய உரவு ஆரம்பித்தவுடன் ஒரு சில நொடிகளிலேயே சக்தி வெளிப்பட்டு சோர்ந்து பலகீனமாகி விடுவார்கள்.

விதைப்பை:

விதைப்பையின் பலகீனத்தால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், விந்து உற்பத்தி குறைவாக இருக்கும். விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருக்கும். விந்துவின் அடர்த்தி குறைந்தும் நீர்த்தும் இருக்கும். உயிரணுக்களின் நீண்டும் சக்தி குறைவாக இருக்கும். உடலுறவில் இன்பமோ உணர்ச்சியோ இருக்காது. ஆணுறுப்பு சிறுத்து விடும். உச்சகட்டம் என்பதே ஏற்படாது. இப்படிப்பட்ட ஆண்மை குறைவுள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியமே இருக்காது.

நரம்பு மண்டலம்:

நரம்பு மண்டலத்தின் பாதிப்பினால், ஆண்மை குறைவு ஏற்பட்டால், ஆணுறுப்பு சோர்ந்து மெலிந்து இருக்கும். உறுப்பின் அடிப்பகுதி சிறுத்தும், நுனிப்பகுதி பெருத்தும், கோணலாகவும் வளைந்தும் இருக்கும். விறைப்புத்தன்மை இல்லாமல் ஆணுறுப்பு மிகவும் சிறியதாக இருக்கும். உடல் உறவு ஆரம்பித்தவுடன் இன்பமோ உச்சகட்டமோ இல்லாமல் ஒரு சில நொடிகளில் சக்தி வெளிப்பட்டு விடும். இப்படிப்பட்ட 5 காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.

              

           .

Thursday, 23 May 2019

வெண்புள்ளி,சொரியாசிஸ்,செதில் உதிரும் நோய்:

வெண்புள்ளி மற்றும் தோல் நோய்களுக்கு
                     நிரந்தர தீர்வாகும்  .                                                                         *                 சேவகனார் தைலம்:
        **************************************
        **************************************   
தோல் நோயின் தன்மை தோல் நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான மருந்துகள் போன்றவை சித்த மருத்துவ நூல்களில் விபரமாக தொகுக்கப்பட்டுள்ளன அதில் யூகி முனிவருக்கு  முன்பு நூல் எழுதியவர்கள் எல்லாம் பெரும்பாலும் முக்குற்ற அடிப்படையில் மட்டுமே நோய்களை விவரித்துள்ளனர் ஆனால் நோய் கணிப்பில் புதிய யுக்தி முறையை புகுத்தி நோய் கணிப்பை எழுதியவர் யூகி முனிவரே  ஆவார் .
*******************************************************
யூகிமுனிவர் தோல் நோய்களை பாகுபடுத்தும் போது தனது யூகி வைத்திய சிந்தாமணி என்ற நூலில்

குஷ்டம் தான் பதினெட்டின் சாத்தியம் கூறக் கேள்                   சாம கிருஷ்ண குஷ்டம் சாத்தியமாமென்னே

என்று கூறி 18 வகைகளில் 10 வகையான குஷ்டத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது எளிது என்றும் எட்டுவகை குஷ்டத்தை அசாத்தியம் என்றும் கூறியுள்ளார் அதில் புண்டரீக குஷ்டம் அசாத்தியம் என்றும் அதன் தன்மையை தனது

 497வது பாடலில்

கூடுமே தாமரையின் பூவிதழ் போல்
குவிந்திடுமே கருப்போடு வெளுப்புமாகும்
தேடுமே ......புண்டரீக. புதுமை தானே

 என்று அவர் குறிப்பிடும் நோய் வெண்புள்ளி நோய் என்ற வெண்குஷ்டம் ஆகும் இந்த நோயை சேவகனார் தைலம் குணப்படுத்துகிறது .

வெண்புள்ளி நோய்.
**********************
உடம்பில் கை கால் முகம்  பிறப்பு உறுப்புகளில் ஆரம்பகாலத்தில் வெண் புள்ளிகளாக தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி உரோமம் உள்பட தோல் பகுதி முழுவதும் வெண்மை நிறத்தை அடையும் இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும் முதலில் ஆசனவாய் உள்ளங்கால் உதடு விரல்களின் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும் .

செதில் உதிரும் நோய்:.
*************************
 இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாக தோன்றும் அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை கை கால் முகம் வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன் செதில் செதிலாய் தோன்றி விரிவடையும்.        யூகி முனிவர்  தனது நூலில் இதன் தன்மைகளை விரிவாக எழுதியுள்ளார் விற்போடகக்  குஷ்டம் என்ற தலைப்பில்

 498 வது பாடலில் குஷ்டரோக நிதானம் பகுதியில்

 புதுமையை சரீர மெங்கும் தினவு உண்டாகும் கனத்த விருப்போடு குஷ்டம் தானே என்று கூறியுள்ளார் அவரின்
 517 வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார் இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம்  அவர்களை நோயிலிருந்து விடுபட செய்கிறது .

              சேவகனார் தைலம் செய்முறை .
      *********************************************
தேவையான பொருட்கள்:
*****************************
பிரிவு - அ

கார்த்திகை கிழங்கு 100 கிராம்
காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
முதியோர் கூந்தல் 100 கிராம்
பிரப்பன் கிழங்கு 100கிராம்
பரங்கிப்பட்டை 100 கிராம்
முதிர்ந்த வேம்பின் பட்டை 100 கிராம்
வெள்ளாட்டு சாணி 100 கிராம்

பிரிவு-ஆ

புங்கன் எண்ணெய் 200 மில்லி
வேப்ப எண்ணெய் 200 மில்லி
இலுப்பை எண்ணெய் 200 மில்லி
 ஆமணக்கு எண்ணெய் 200 மில்லி
நல்லெண்ணெய் 200 மில்லி .

பிரிவு-இ

வெள்ளை பூண்டு சாறு  1 லிட்டர்
பெருங்காயம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
மிளகு 50 கிராம்
திப்பிலி 50 கிராம்
கற்கண்டு 500 கிராம்

செய்முறை
*************
பிரிவு - அ - வில் குறிப்பிட்ட மருந்து சரக்குகளை நன்றாக இடித்து பட்டைகளை நன்றாக சிதைத்து 100 லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு ஒரு மரத்து விறகு கொண்டு ஒரு லிட்டராக சுண்டும் வரை நன்றாக எரிக்கவும் அந்த கசாயத்தை நன்கு வடிகட்டி கொண்டு ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அதில் பிரிவு - இ -யில் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களை கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்து பின்)                          ஆ - பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி எரித்து நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டை பொடி செய்து போட்டு மெழுகு பதம் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.

மருந்தின் அளவு.
*******************
.
 பெரியவர்களுக்கு ஒரு தேக்கரண்டி (5 மில்லி) சிறியவர்களுக்கு அரை தேக்கரண்டி( மூன்று மில்லி) மருந்தை பச்சை அரிசி மாவில் கலந்து காலை மாலை இருவேளைகள் உணவிற்கு 15 நிமிடம் முன்பு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்

மருந்துண்ணும் நெறி:
************************
மருந்து உண்ணும் போது இறைச்சி உலர்ந்த மீன் மொச்சை கொள்ளு புளி புளிப்பு சுவையுள்ள பழங்கள் பூசணி கடுகு எண்ணெய் புகையிலை மற்றும் போதை பொருட்கள் தவிர்க்க வேண்டும் உடலுறவு கூடாது

குணப்படுத்த முடிவதும் முடியாததும்: செதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும் வெண்புள்ளி நோய் ஆரம்ப நிலை மற்றும் நடு கட்டத்தில் குணமாகும் ஆனால் வெண்புள்ளி நோய் உடல் முழுவதும் பரவி வெண்படை நோயாகி முழங்கால் கைகளிலும் கரடு ஏற்பட்டு  புபுண்களாகி நீர்வடியும் பட்சத்தில் முழுமையாக தீர்க்க முடியாது

நோய் குணமாவதற்கான பிறநடவடிக்கைகள்.
**************************************************
          மாதம் 2 நாள் பேதியாகும் மமருந்துகளை கொடுப்பது.
காலை மாலை என இருவேளையும் தலை முதல் கால் வரை வெந்நீரால் துடைப்பது அல்லது குளிப்பது.
            உடல் சூட்டைக் குறைப்பதற்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தைல வகைகளான சந்தனாதி பொன்னாங்கன்னி போன்றவற்றைப் பயன்படுத்த அறிவுருத்துவது.
            மேலும் குமரி நெய் கட்டுக்கொடிச் சாறு வெங்காயச் சாறு இவற்றுடன் தேன் கலந்து உட்கொள்ள பரிந்துரை செய்தல்.
****************************************
பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம் புத்தகத்தில் இருந்து

****************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*****************************************
*****************************************

Wednesday, 22 May 2019

ஆவாரம்பூ தேனீர்.

ஆவாரம்பூ தேனீர். (அனைவருக்கும் ஏற்றது)
**********************************************.
நிழலில் காய வைத்துஇடித்துத்
தூள் செய்த ஆவாரம்பூ தூள்            -   200 கிராம்
மல்லி வருத்து இடித்த தூள்               -   100 கிராம்
பருத்தி விதை வருத்து இடித்த தூள்-   100 கிராம்
காய வைத்து இடித்த ரோஜா இதழ் தூள்-75 கிராம்
காய வைத்து இடித்த ஏலக்காய் தூள்     -  50 கிராம

*******************************************************
எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்து கொண்டு
தண்ணீரில் தேவையான அளவு கலந்து காய்ச்சி
டிகாசன் எடுத்து காய்ச்சிய சூடான பாலில் சேர்த்து
பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிடவும்

********************************************************
சூடு தணியும். மூத்திரம் நன்றாக போகும். இதயத்திற்க்கு நற்பலன் ஏற்படும்.விந்து நஸ்டம் ஏற்படாது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். புத்துனர்ச்சி ஏற்படும். ருசியா இருக்கும் பித்தம் தனிந்து மலச்சிக்கல் சரியாகும்.சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் சிறப்பாக இருக்கும்.அனைவருக்கும் ஏற்றது.
*********************************************************

.

தலைவழி,கைகால் வழி நீங்க மின்சார தைலம்.

அதிசய மருந்து மின்சார தைலம்.
************************************
************************************
பொதினா உப்பு மென்தால்    ----  30 கிராம் .
ஓம உப்பு தைமால்                     ----  30 கிராம்
கட்டி கற்பூரம் என்ற பூச்சூடம்  ----  15. கிராம்
பச்சை கற்பூரம்                            ---   15. கிராம்
ஒரு கண்ணாடி பாட்டிலில் நான்கு பொருட்களையும் தனித்தனியாக தூள் செய்துஒன்றாக ககலந்து சற்று  நேரம் வெயிலில் வைக்கவும் நீராக உருகி விடும்  பின் வடிகட்டி உபயோகிக்கலாம் .

தீரும் நோய்கள் .
******************
 1.சாதாரணம் சுரம்: மூன்று முதல் ஐந்து சொட்டு காபி அல்லது பாலில் கலந்து கொடுக்கவும்
. 2. வயிற்று வலி: ஐந்து துளி வென்னீரில் கொடுக்கவும்.
3. வாந்தி தேனில் எலுமிச்சம்பழச் சாறு கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 4. காலரா பழுப்பு சர்க்கரையில் மூன்று விட்டுக் கொடுக்கவும் 3 மணி நேரத்தில் நிற்காவிடில் நிற்கும் வரை மூன்று மணிக்கு ஒரு தடவை கொடுக்கவும்.
5. தலைவலி இஞ்சி சாற்றில் தேன் கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 6. விக்கல் சூடான பாலில் மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 7. கக்குவான் இருமல் தேன் அல்லது நன்னாரி சர்பத்தில் இரண்டு துளி விட்டுக் கொடுக்கவும் தொண்டையில் தைலத்தை தேய்க்கவும் உள் நாக்கில் தடவவும் இவ்வாறு நான்கைந்து நாட்கள் செய்யவும்.
8. தாது விருத்திக்கு வெண்ணையில் அல்லது அல்வாவில் மூன்று துளி விட்டு காலை மாலை சாப்பிட்டு வரவும்.
 9. பித்தத்திற்கு எலுமிச்சை இலை அகத்திக்கீரை சம அளவு கசாயம் ஒரு அவுன்சு கசாயத்தில் மூன்று துளி விட்டு ஐந்து நாட்கள் சாப்பிடவும்.
10. காசத் தீர்க்கும் கோழை நாசத்திற்கும்
ஆடாதொடை கசாயத்தில் தேன் விட்டு மூன்று துளி வீதம் குணமாகும்வரை சாப்பிடவும்.
11. மந்தாரகாசம் கண்டங்கத்திரி தூதுவளை துளசி இவைகளை சேர்த்து கசாயம் செய்து நெய் தேன் விட்டு ஒரு வேலைக்கு மூன்று துளி குணமாகும்வரை சாப்பிடவும் (தேனும் நெய்யும் சம அளவாக சேர்க்கக்கூடாது சிறிது கூடுதல் குறைச்சலாக சேர்க்க வேண்டும் ஒரு மனிதன் தேனையும் நெய்யையும் சம அளவு சேர்த்து குடித்தால் அது மரணத்துக்கு ஏதுவாகும்).
12. சகல வலி பஞ்சில் நனைத்து வலியுள்ள பாகத்தில் தொட்டு வைக்கவும் வீக்கத்தில் தைலத்தைத் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும்.
13. இடுப்பில் பிடிப்பு கை கால் குடைச்சல் சுக்கு கசாயத்தில் மூன்று துளி இதுபோல் மூன்று நாள் வலியுள்ள பாகத்தில் தைலம் தேய்த்து மணலை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். 14. காதில் சீல் தேங்காய் எண்ணெய் ஒரு அவுன்சில் ஏழு துளி கலந்து காதில் மூன்று துளி விட்டு பஞ்சில் அடைக்கவும் தவிர பாலில் மூன்று துளி விட்டு மூன்று நாள் சாப்பிடவும். 15. கண்டமாலை கட்டிகளுக்கு வேப்ப எண்ணெய் ஒரு அவுன்சில் 10 துளி ரணங்களில் தடவவும்.
16. குழந்தைகளின் மாந்தகம் மஞ்சனத்தி துளசி பொடுதலை இவை ஒன்றில் கஷாயம் செய்து தேன் விட்டு அதில் ஒரு துளி விட்டு மூன்று நாள் கொடுக்கவும்.
17. அண்டவாதம் குடல்வாதம் எருக்கலம் பூவில் மொட்டு பூ ஒன்று வெள்ளைப் பூடு பல் 1 மிளகு 5 அரைத்து அதில் துளி விட்டு இரண்டு வேளை கொடுக்கவும் மேலே மேற்படி தைலத்தை தடவி தேங்காயை துருவி அத்துடன் களர்ச்சி கொட்டை இலையையும் சேர்த்து சூடு பண்ணி ஒத்தடம் கொடுக்கவும்.
18. ஜன்னி இஞ்சி முருங்கைப்பட்டை வெள்ளைப்பூடு இவைகளைத் தட்டி சாறு எடுத்து ஒரு கரண்டி வேப்ப எண்ணெய் கலந்து ஐந்து சொட்டுகள் கொடுக்கவும்.
19. சோகை நீர் வீக்கத்திற்கு நீர்முள்ளி இலை கோவை தண்டு சுரைக்கொடி வகைக்கு கைப்பிடி எடுத்து கசாயம் செய்து இரண்டு துளி விட்டு ஒரு வாரம் கொடுக்கவும்.
 20. மூலக் கிராணி வயிற்று இரைச்சல் தான்றிக்காய் சூரணத்தில் திரிகடி எடுத்து தேனை கலந்து 2 துளி 5 நாட்கள் கொடுக்கவும்.
21. வயிற்றுக்கடுப்பு எருமை தயிரில் லவங்க கொழுந்தை சேர்த்து அரைத்து நெல்லியளவு அதில் ஒரு துளி மூன்று நாட்கள் அல்லது நாவல் பட்டை கசாயத்தில் ஒருதுளி ஆகாரம் ஜவ்வரிசியில் கஞ்சி அல்லது தயிர் சாதம் மட்டும் சேர்க்கவும்.
22. பெண்கள் பெரும் பாடு பசு வெண்ணெயில் மூன்று துளி மூன்று வேளை கொடுக்கலாம்.
23. நடுக்கல் சுரம் முந்தின  வேப்பம் பட்டை கசாயத்தில் மூன்று துளி 3 நாட்கள் கொடுக்கலாம்.
24. அஜீரணம் குளிர்ந்த நீரில் 2 துளி கொடுக்கவும்.
25. நீரடைப்பு வெள்ளரிக்காய் வாழைத்தண்டு முள்ளங்கி இவை ஒன்றின் சாரில் இரண்டு துளி கலந்து கொடுக்கவும். 26. சரீரத்தில் திடீர் தடிப்பு மதமதப்பு நீர் சம்பந்தமான சரீர உப்பிசம் காலை மாலை மூன்று துளி காப்பியில் கொடுக்கவும்.
27. தேள் பூரான் மூட்டை பூச்சி கடிக்கு பொன்னாவாரை கசாயத்தில் ஒரு அவுன்சில் சீனி போட்டு இரண்டு துளி கொடுக்கவும்.
28. ரத்த காசத்திற்கு தேங்காய் பாலுடன் தேன் கலந்து ஒரு ஸ்பூன் அளவு அத்துடன் மருந்து 2 துளி இது காலையில் பின் மாலையில் தேங்காய் பாலுடன் நெய் கலந்து இரண்டு துளி கொடுக்கவும்.
29. கரப்பான் சொறி சிரங்கு நில ஆவாரை சூரணத்தில் திருகடி பிரமாணத்தை எடுத்து ஒரு துளி விட்டுக் கொடுக்கவும் வேப்ப எண்ணெயில் கொஞ்சம் விட்டு மத்தித்து மேலுக்கு ரணங்களில் மேல் போடவும்.
30. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கட்டி வெள்ளரி விதை கசாயத்தில் ஒரு துளி வீதம் ஐந்து நாட்கள் கொடுக்கவும் .

மேற்படி 30 வியாதிகளையும்.
ஆரம்பநிலையில் இருந்தால் இந்த மருந்து குணப்படுத்தும்.

  31. தலைவலி தலைபாரம் வலி உள்ள இடத்தில் தடவி லேசாக தேய்த்து விடவும் புருவத்திற்கு மேற்புறம்  பொட்டு பகுதியில் தடவி தேய்த்து விடவும்.
32. பல் வலி பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைக்கவும் எச்சில் விழுங்க கூடாது சிறிது நேரம் கழித்து வெண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்.
33. தொண்டை வலி தொண்டைப் பகுதியில் லேசாக தடவி விடவும் சுடு நீரில் இரண்டு துளி விட்டு வாய் கொப்பளிக்கவும்.
 34. அடிபட்ட வீக்கம் ரத்தக்கட்டு  போன்ற இடத்தில் தைலத்தை தாராளமாக தடவி விடவும் தேய்க்கக் கூடாது காலையில் தடவி மாலையில் சுடு நீர் விட்டு கழுவவும் மாலையில் தடவி காலையில் சுடு நீர் விட்டுக் கொள்ளவும். 35. கண்ணில் நீர் குத்தல் புருவத்திற்கு கீழ் கண்ணில் படாமல் தடவி விடவும் கண்ணில் இருந்து நீர் வெளியேறி சுகப்படும்.
 36. உடல்வலி தசைவலி தேங்காய் எண்ணெயில் சில துளி விட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்து விடவும்.                                 மேலும் பலவிதங்களில் இதை பயன்படுத்தலாம்.
***************************************************
***************************************************

முக்கிய குறிப்பு
*****************
தைலம் கடுமையான எரிச்சலைக்கொடுக்கும் மென்மையான தோல் உள்ளவர்கள் குறைவாக பயன்படுத்தவும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது.
***************************************************************.
அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய தைலம்.
***************************************************

M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
*********************************************

செரியாமை,மலக்கட்டு,வாயு தொல்லை நீங்க மருந்து

சஞ்ஜீவி பற்பம்.
********************
********************
தேவையான பொருட்கள்.
****************************
படிகாரம் 125 கிராம்.
நவாச்சாரம் 75 கிராம்
வெடியுப்பு 600 கிராம்

செய்முறை
*************
முன்றையும் தனித்தனியாக அரைத்து பின் ஒன்று சேர்த்து அரைத்து. ஒரு சட்டியிலிட்டு உருக்கி ஒரு பிங்கான் பாத்திரத்தில் விடவும்.இதனை ஆறியபின் நன்கு கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக்கொள்க.

பயன்கள்.
************
தேகதிடம் அறிந்து காலை மாலை தேவைபட்டால் மதியம் என தகுந்த அனுபானத்தில் எடுத்து கொள்ளலாம்.

வெளுப்பு உப்பு சத்து . கால் வீக்கம். முதலிய நோய்கள் தீரும்

கடுக்காய் குடிநீருடன் எடுத்து கொண்டால் செறியமை நோய்கள் தீரும்.

பெருங்காயத்துடன் எடுத்து கொண்டால் வாயு தீரும்.

இஞ்சி சாற்றுடன் எடுத்து கொண்டால் மலக்கட்டு  தீரும்

நெருஞ்சில் சாறுடன் எடுத்து கொண்டால் சிறுநீர்கட்டு தீரும்

சுரைகொடிச் சாறுடன் எடுத்து கொண்டால் உப்பு சத்து குறையும்.

சோம்புகுடிநீர் உடன் எடுத்து கொண்டால் வயிற்று வலி தீரும்

சீரககுடிநீருடன் எடுத்துகொண்டால் கிறுகிறுப்பு .தீரும்.

 அனுபானம் அறிந்து பல நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
**********************************************************
*********************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
**********************************************
**********************************************

சிறுநீரில் ரத்தம் வருதல் விந்து வருதல் மூலவியாதிகள் கல்லீரல் மண்ணீரல் நோய்கள்

.                  பொன்னாற்மேனியன்
                   பொன்னுடம்பை கான
               பொற்றலைக் கையாந்தகரை
      *****************************************
பொற்றலைக்கை யாந்தகரைப் பொன்னிறமாக் கும்முடலை சுத்தமுறக் காக்குஞ்சுகங் கொடுக்குஞ் - சிற்றிடையாய் சிந்தூரங் கட்காகுஞ் சிந்தை தனைத்துலக்கும்
உந்திவளர் குன்ம மொழிக்கும் ..

உடலிற்கு பொன்னிற சாயலையும் கண்களுக்கு ஒளியையும் புத்திக்கு தெளிவையும் உண்டாக்கும் குன்மக்கட்டியை போக்கி குருதியை சுத்தப்படுத்தும் இவ்வரிய கற்ப மூலிகை இதனால் பலவித செந்தூரங்கள் செய்யவும் உதவும்

5 வயது முதல் 90 வயது வரை ஆண் பெண்கள் இதை எவ்வித பத்தியமும் இல்லாமல் சாப்பிட்டு வரலாம்.

ஒரு மாதத்தில் வாக்கு சுத்தியாகும்
இரண்டு மாதத்தில் உடல் நிறம் மாறும்
மூன்று மாதங்களில் உடலில் உள்ள குருதியை( இரத்தத்தை) சுத்தப்படுத்தி  சீவனுக்கு எமனாக இருக்கும் கபத்தை போக்கி சுவாசத்தை பலப்படுத்தும்
நான்காவது மாதத்தில் சுக்கில சுரோணிதங்களை விருத்தியடையச் செய்யும்.
ஐந்து மாதங்களில் அழகையும் முகத்திற்கு வசீகரத்தையும் உண்டாக்கும்
ஓராண்டு காலத்தில் வாக்கு பலிதம் ஏற்படும்
ஐந்துஆண்டு காலத்தில் சாப்பிட்டால் மாறாத இளமையும் நீண்ட ஆயுளையும் உண்டாக்கும்
இந்த ஒரே மூலிகையை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் வைத்தியர் இடத்தில் போகும் தேவை ஏற்படாது அதாவது எந்த நோய்க்கும் உள்ளாகாமல் உடல் பலத்துடனும் மனோபலத்துடனும் விசாலமான புத்தியுடனும் நீண்ட ஆயுளுடன் வாழலாம் ஐந்து ஆண்டு காலங்கள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பல நோய்கள் நீங்கும் .

மேலும் மூத்திரத்தில் ரத்தம் வருதல் விந்து வருதல் மூலவியாதிகள் கல்லீரல் மண்ணீரல் நோய்கள் சுவாச காசம்  சரும வியாதிகள் ஆகியவை குணமாவதுடன் சரீரத்திற்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் பூச்சிகளை வெளிப்படுத்தி கிருமிகளால் ஏற்பட்ட கோளாறுகளையும் குணப்படுத்தும் உயர்ந்த கற்ப மூலிகையாகும் இம்மூலிகையை எந்த வயதினரும் சாப்பிட்டுவர வேறு எதனாலும் பெற முடியாத நற்பலன்களையும் பெறலாம்.

கற்பசெந்தூரம்.
*****************
  வெடியுப்பு. நவாச்சாரம் இரண்டையும் கொண்டு மடித்து இடித்து எடுத்த இரும்பு தூளை
கந்தகம் அரிசி சாதம் கொண்டு நான்கு முறை புடமிட்டு
கார்பன் மற்றும் துரு முழுமையாக நீக்கப்பட்ட இரும்பு தூள்
தேவையான அளவு எடுத்து கொண்டு அதில் தினந்தோரும் பொற்றலைக்கையாந்தகரை சார் விட்டு ஆறுமாதம் வெய்யல் காலத்தில் வைத்து வர வேண்டும் பின் மேல் அகல் மூடி  பெரும்புடமாக போட்டு எடுத்து கொண்டால் அருமையான  கற்பசெந்தூரம் கிடைக்கும்.
அயதங்க செந்தூரம் எல்லாம் இதற்கு ஈடாகாது.
பல்வேறு புற்று நோய்களில் சிறப்பாக வேலை செய்யும்.
இந்த செந்தூரத்தால் மேலே மூலிகையில் கூறப்பட்ட பலன்கள் கிடைப்பது திண்ணம் .   
                                                                                                                          மருதர் இன்னிசை  மாலையால் துதிக்கவே
தியானத்தில் ஆழ்ந்த. யோகிககள் கானவே ...கூடும்.

***********************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*****************************

Tuesday, 21 May 2019

வாதம்,பித்த,கப நோய் இரத்த புற்று,கன்ன புற்று

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி.
***************************************************
சித்தமருத்துவத்தின் பெருமையினை போற்றும்
                             ரசசுண்ணம்
                        *******************
பஞ்சபூதத்தின் கூட்டுறவினால் உருவானதுமான
அறுசுவையும் ஒருங்கே பெற்றதுமான
இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா தாது பொருட்களுக்கும் மேம்பட்டதுமான
வெப்பம், குளிர்ச்சி என்ற இரண்டு வீரியத்தையும் பெற்றதுமான
எல்லா பொருட்களிலும் வியாபித்து இருப்பதுமான
ஜீவனின் ( சிவன் ) விந்து என போற்றப்படுவதுமான

ரசத்தை உயர்நிலை சுண்ணமாக்கி உயிர்காக்கும் மருந்தாக செய்த பெருமையும் சித்தர்களுக்கே..

ரசம் சார்ந்த மருந்துகளின் பெருமைய சித்தமரபினர்

        ஜெய சூதத்தில் மருந்து செய்தால்
                  செத்த பிணம் வாய் பிளக்கும்   .என்பார்கள்.

.                           ரசசுண்ணம்
                        *****************

        மேக நோய் வாத பித்த கப தொந்தரவுகள் தொந்த நோய்கள் ரத்தப்புற்று கண்ணப்புற்று குறிப்புற்று கண்டமாலை பிளவை விப்புருதி காளாஞ்சக படை கரப்பான் வாதம் கீழ்வாயு குணமாகும் கிருமிகளைக் கொல்லும் ரத்த சுத்தி மூளை பலம் நரம்பு பலம் உண்டாகும் உடல் இறுகி உரம் பெறும்( ஜெய சூதத்தில் மருந்து செய்ய செத்த பிணமும் வாய் பிளக்கும்) எங்கு நெறி கட்டினாலும் குணமாகும் வீக்கம் கரையும் இரத்தம் சுத்தமாகும் கிருமிகளைக் கொன்று புண்களை ஆற்றும் மூளையை வலுப்படுத்தி ஞாபக சக்தியை தரும் முக அழகு உண்டாகும்.
இறை  ஆற்றல் மிகும்.

M.s.சித்தா சிகிச்சை&ஆராய்ச்சி மையம்.
கல்பகனூர்.
Ph:9443853756.Siddha maruthuvam

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...